புதுக்கோட்டையில் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அலுவலர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலக கட்டிடத்தில் தங்கி கொண்டு அங்குள்ள பணிகளை செய்து வந்த நாகரெத்தினம் என்பவர் கடந்த மாதம் 19&ந் தேதியன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், நகர காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் காவல் ஆளிநர்கள், சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரடியாக அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.