கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டி பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு மாடுகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது கால்நடைகளுக்கு தாது சத்தை அதிகரிக்க செய்யும் மருந்து பவுடர் பாக்கெட் வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் வாங்கி சென்றனர். இந்தநிலையில், அந்த மருந்து டிசம்பர் 2019-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு நவம்பர் 2021-ல் காலாவதி ஆவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட பாக்கெட்டுகளிலும், மருத்துவர்கள் வைத்திருந்த பாக்கெட்டுகளிலும் அதே தேதியே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மருத்துவ குழுவினர் அந்த பாக்கெட் வழங்குவதை நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து கறவை மாடு வளர்க்கும் பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கோமாரி நோய் தாக்கி பல கால்நடைகள் இறந்துவிட்டன. கால்நடை மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பதில்லை. தொடர் கோரிக்கைக்கு பிறகு தான் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் காலாவதி மருந்துகளை வினியோகம் செய்யாமல் கவனமாக இருந்து எங்கள் கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.