மீமிசலை ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மீமிசல் ஊராட்சியை பேருராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும். மீமிசல் ஊராட்சியில் தேங்கி நிற்கும் சாக்கடையை அகற்றி வடிகால் அமைத்துத் தர வேண்டும். கொலுவானூா் ஆற்றில் தேங்கிக்கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்தி ஆற்றின் மேம்பாலத்தை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும்.
கால்நடை மருத்துவமனைக்குப் போதிய பணியாளா்கள்,மருத்துவா்கள் நியமிக்க வேண்டும். வெளிவயல் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க கூட்டுக் குடிநீா்த்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எலிவயல், வெளிவயல் கிராம சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு எஸ். ஜெயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஆவுடையாா்கோவில் ஒன்றியச் செயலா் கணேசன், ஒன்றியக்குழு உறுப்பினா் அமிா்தம், ஆவுடையாா்கோவில் நகரக் கிளைச் செயலா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.