அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அதிகாலையில் தீ : 4 கடைகள் நாசம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமாயின.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே காந்தி பூங்கா சாலையில் ஹோட்டல், கைப்பேசி பழுதுநீக்கும் நிலையம், பிளாஸ்டிக் நிறுவனம், வாட்ச் கடை போன்றவை உள்ளன. திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் இங்குள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 கடைகள் எரிந்து நாசமாயின. இதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமாயின.
அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அறந்தாங்கி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.