அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அதிகாலையில் தீ : 4 கடைகள் நாசம்





அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அதிகாலையில் தீ : 4 கடைகள் நாசம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமாயின.

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே காந்தி பூங்கா சாலையில் ஹோட்டல், கைப்பேசி பழுதுநீக்கும் நிலையம், பிளாஸ்டிக் நிறுவனம், வாட்ச் கடை போன்றவை உள்ளன. திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் இங்குள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 கடைகள் எரிந்து நாசமாயின. இதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமாயின.


அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அறந்தாங்கி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments