புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நகராட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்திட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது
அறந்தாங்கியில் நடைபெற இருக்கிற நகராட்சி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் பதட்டமின்றியும்....அச்சமின்றியும் வாக்களித்திட
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் 10.02.2022 ஆம் தேதி அறந்தாங்கி காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை சாலை சந்திப்பான செக்போஸ்ட்டில் இருந்து புறப்பட்ட கொடி அணிவகுப்பினை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜெரினாபேகம் அவர்களின் தலைமையில் இசை வாத்தியங்கள் முழங்க துவக்கி வைத்தார்கள்.
அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.தினேஷ்குமார், காவல் ஆய்வாளர் திரு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணியானது செக்போஸ்டில் துவங்கி பெரியகடைவீதி, பழைய ஆஸ்பஸ்திரி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, அண்ணாசிலை சாலை வழியாக சென்று பேருந்து நிலையம் முன்பு பேரணி நிறைவடைந்தது.
மேலும் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி, நாகுடி,ஏம்பல்,கரூர், கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
என்றும் மக்கள் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.