மயிலாடுதுறையில் இருந்து மதுரைக்கு பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
கோரிக்கை மனு
பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் தலைவர் ஜெயராமன்,செயலாளர் விவேகானந்தம்
ஒருங்கினைப்பாளர் கலியபெருமாள் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னை எழும்பூருக்கு இரு முனைகளில் இருந்தும் இரவு விரைவு ரெயில் இயக்க வேண்டும். ரெயில்வே நிர்வாகம் இயக்க திட்டமிட்டுள்ள வாரம் மும்முறை செல்லும் தாம்பரம்-செங்கோட்டை வாரம் இருமுறை செல்லும் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் விரைவு ரெயில் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரெயில் இயக்க வேண்டும்.
மதுரை வரை...
மேலும் விழுப்புரத்திலிருந்து காலை மயிலாடுதுறைக்கு வந்து இரவு மயிலாடு துறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலை காரைக்குடி, மதுரை வரை நீட்டிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி யுள்ளனர்.
மயிலாடுதுறை-காரைக்குடி வரை இயக்கப்பட்டு வரும் டெமு ரெயிலை, பயணிகள் ரெயிலாக மாற்றி, மதுரை வரை போக்குவரத்தை நீட்டித்து தரவேண்டும் என தென்னக ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
மயிலாடுதுறை-காரைக்குடி வரை இயக்கப்பட்டு வரும் டெமு ரெயிலை, பயணிகள் ரெயிலாக மாற்றி, மதுரை வரை போக்குவரத்தை நீட்டித்து தரவேண்டும் என தென்னக ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை- காரைக்குடி
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக காரைக்குடி வரை ‘டெமு’ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்க தலைவர் மெய்ஞானமூர்த்தி, செயலாளர் பழனிவேல், பொருளாளர் கணேசன், அமைப்பாளர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பாரதி நடராஜன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர் உள்ளிட்ட தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
பயண நேரம் குறைப்பு
பட்டுக்கோட்டை-பேராவூரணி வழியாக காரைக்குடி வரை உள்ள ஆளில்லா ரெயில்வே கேட் பகுதியில், தற்போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) முதல் திருவாரூர்- காரைக்குடி முன்பதிவில்லா சிறப்பு விரைவு ‘டெமு’ ரெயிலின் பயண நேரம் 3½ மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் கூடுதலாக 2 விரைவு ரெயில்களை இயக்க வேண்டும். விரைவு ரெயிலை பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும்.
மதுரை வரை...
ரெயில்வே நிர்வாகம் வாரம் 3 முறை இயக்க திட்டமிட்டுள்ள தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில், வாரம் இருமுறை செல்லும் வேளாங்கண்ணி-எர்ணாகுளம் விரைவு ரெயில் ஆகியவற்றையும் உடனடியாக இயக்க வேண்டும்.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மதுரை செல்லும் ரெயிலை திருவாரூர் - பட்டுக்கோட்டை- பேராவூரணி - அறந்தாங்கி காரைக்குடி வழியாக இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு இயக்கப்படும் ‘டெமு’ ரெயிலை சாதாரண ரெயிலாக மாற்றி பயணிகள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் இயக்கவும், இந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.