தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர் கூட்டம் அறந்தாங்கி மர்க்கஸில் மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முகம்மது பாரூக் மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் மற்றும் மாவட்ட துனை செயலாளர்கள் சேக்அப்துல்லா, அப்துல் முஹ்சின்,ரபீக் ராஜா,பீர் முகம்மது, மருத்துவஅணி செயலாளர் முகம்மது அலி, மாணவரணி முஹம்மது சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் தாவூத் கைசர், முகம்மது ஒலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
* இஸ்லாமிய பித்அத் ஒழிப்பு மாநாடு 2023 பிப்ரவரி 5 ம் தேதி நடத்துவது. இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* இஸ்லாமிய திருமணத்தினை நடத்தி வைக்கும் இமாம் அல்லது காஜி அளிக்கும் சான்றே போதுமானது. எனவே சட்டப்படி மக்களை அலைகழிக்காமல் பதிவுத்துறையினர் பதிவுசெய்யவேண்டும்.
* சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காக்கவேண்டும்.
* மணமேல்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்கவேண்டும்.
* புதுக்கோட்டை மாவட்டத்தில் தெருநாய்கள்,வெறிநாய்களை கட்டுபடுத்த வேண்டும்.
* அறந்தாங்கி குட்டை குளத்தை சுற்றி பாதுகாப்பு வளையத்தை நகராட்சி நிர்வாகம் அமைத்து தர வேண்டும்.
* கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்துள்ள கர்நாடகா பாசிச அரசை கண்டிக்கிறோம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட துணை தலைவர் முகம்மது மீரான் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.