திருவாரூர் மாவட்ட உபயோ கிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகரா ஜன்.மாவட்ட செயலாளர் டாக்டர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரயில்வே அமைச்சர், திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் உள்ளிட்டோர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை ரூ.1,500 கோடி செலவில் முடிக்கப் பட்டு 2 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து இல்லாமல் இருந்து வருகிறது.
திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்கங்கள் வியாபார நோக்கிலும் வழித்தடத்தை விரும்புகிறார்கள். சென்னை- தூத்துக்குடி ரயில் மார்க்கம் திருச்சி, மதுரை வழியே 670 கி.மீ. சுற்றி செல்கிறது. ஆனால் சென்னை-காரைக்குடி வழியே இயக்கப்பட்டால் 130 கி.மீ. எரிபொருளும் பயண நேரமும் மற்றும் பயணச் செலவும் குறையும். இவ்வழியில் போக் குவரத்து நெருக்கடியும் மிகவும் குறைவாக உள்ளது. ஆதலால் ரயில் கிராசிங் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரிகளிடம் இருந்தும் பொதுமக்களிடம்
இருந்தும் மாவட்ட ரயில் உப யோகிப்பாளர்கள் சங்கத்திற்கு இத்தடம் வழியில் விரைவு வண்டி இயக்க கோரிக்கை வந்துள்ளது.
தென் மண்டல ரயில்வே நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு சென்னை தூத்துக்குடி விரைவு ரயிலை திருத்துறைப்பூண்டி காரைக்குடி அகல ரயில் பாதை வழியே இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.