காரைக்குடி - கன்னியாகுமரி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டம் சாத்தியமற்றது; மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்






டெல்லி: காரைக்குடி - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

காரைக்குடி - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

இதன்படி, காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில்பாதை  ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கடலோரப் பகுதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கடந்த 2011ல் 2 பகுதிகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், நிதி ரீதியாக இந்த திட்டம் சாத்தியமற்றது என்பதால் அதை மத்திய ரயில்வே அமைச்சகம்  முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments