சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை வழியாக செல்லும் போட்மைல் ரயில் இன்று(24/02/22) பிறந்தநாள் காண்கிறது.
கடந்த 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சென்னை எழும்பூர்- கொழும்பு இடையே போட்மெயில்(Boatmail) ரயில் தொடங்கிவைக்கப்பட்டது. சென்னை எழும்பூர்-தனுஷ்கோடி வரை ரயிலிலும், தனுஷ்கோடி-தலைமன்னார் வரை படகிலும் பிறகு தலைமன்னார்-கொழும்பு வரை ரயிலிலும் இயங்கிவந்துள்ளது. பகுதி ரயில் பகுதி படகில் பயணிப்பதாலேயே இந்த ரயிலுக்கு போட்மெயில்(Boatmail) என்று பெயர் வந்தது. மேலும் இந்தியாவையும் சிலோனையும் இணைத்தால் இந்த ரயில் 'இந்தோ-சிலோன் போட்மெயில்' என்றே அன்றைய காலகட்டத்தில் மக்களால் அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலோனுக்கு வெறும் ₹80/- ரூபாய் கட்டணத்தில் அன்றைய மக்கள் இந்த ரயிலில் பணித்துள்ளனர். இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 50 ஆண்டுகள் வரை இந்தியா/இலங்கை மக்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தாக வரலாறு கூறுகிறது.
தனுஷ்கோடி புயல்!
22 டிசம்பர் 1964 ஆம் ஆண்டு தனுக்கோடியை தாக்கிய புயலின் போது 100 க்கு மேற்பட்ட பயணிகளுடன் பாம்பனிலிருந்து புறப்பட்ட பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் புயலில் சிக்கியது. பல ரயில் பெட்டிகள் கடலில் மூழ்கின. அதன் பிறகு தனுஷ்கோடி-ராமேஸ்வரம் பாதை துண்டிக்கப்பட்டது.
அதிலிருந்து போட்மெயில் ரயில் ராமேஸ்வரம் வரை மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது.
மீண்டும் தனுஷ்கோடி!
தனுஷ்கோடி-ராமேஸ்வரம்(17.5கிமீ) இடையே மீண்டும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த பாதை அமைக்கப்பட்டபின் போட்மெயில் ரயில் தனது பழைய நிலைக்கு திரும்பும் என்று நம்பப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.