கோட்டைப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை மாவட்டம் மீனவர் அணி அலுவலகம் திறப்பு விழா.






கோட்டைப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை மாவட்டம் மீனவர் அணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் மீனவர் அணியின் மாவட்ட அலுவலகம் இன்று (04.02.2022)  கோட்டைப்பட்டிணத்தில்
SDPI மீனவர் அணியின் மாநில தலைவர் NKS.பரக்கத்துல்லாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்ட மீனவர் அணி தலைவர் MLA.அசார் தலைமையேற்று நடத்தினார். SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். மேலும் மாவட்ட துணை தலைவர் PMS.குலாம் முகமது, மாவட்ட செயலாளர் சாலிஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட SDPI மீனவர் அணியின் மாநில தலைவர் NKS.பரக்கத்துல்லாஹ் அவர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பிறகு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும் , மீனவர்களின் உரிமை குறித்தும் ஒரு சிறப்புரை ஆற்றினார்.

இறுதியாக கோட்டைபட்டிணம் நகரத் தலைவர் காசிம் அவர்கள் நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இவன் ,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை (கி) மாவட்டம்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments