அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி 4 பேர் படுகாயம்






அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

கார் மோதல் 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் பார்த்திபன் (வயது 17). இவர்களது உறவினர்கள் அமுதா (52), பாலசிதம்பரம் (16), விஜயலட்சுமி (45). இவர்கள் 5 பேரும், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு திருச்சிக்கு சென்று விட்டு நேற்று அறந்தாங்கிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சண்முகநாதன் ஓட்டினார். 

புதுக்கோட்டை சாலை அறந்தாங்கி அருகே உள்ள எரிச்சி என்ற இடத்தில் வந்த போது ஒத்தக்கடையை சேர்ந்த சேகர் (52) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். அமுதா, பாலசிதம்பரம், விஜயலட்சுமி, சண்முகநாதன், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சேகர் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். 

பெண் பலி 

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அமுதா பரிதாபமாக இறந்தார். பாலசிதம்பரம், விஜயலட்சுமி ஆகிய 2 பேரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சண்முகநாதன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும், சேகர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments