கோபாலப்பட்டிணம் சின்னபள்ளிவாசல் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி!! சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
கோபாலப்பட்டிணம் சின்னபள்ளிவாசல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டிணம் சின்ன பள்ளிவாசல் அருகே பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து தொட்டியின் பில்லர் கால்கள் அனைத்தும் அரிக்கப்பட்டு கீழே விழும் அவல நிலையில் உள்ளது.
இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்புகளும் உள்ளது.தொடர்ந்து பெய்த மழையால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பலவீனமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த பகுதியில் குழந்தைகள், பெரியவர்கள் அதிக அளவில் நடமாடுகின்றனர்.
இந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவசர அவசியம் கருதி இந்த பலவீனமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உயிர்பலி வாங்கும் முன் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.