அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய அறிவியல் தின விழாவிற்கு தலைமை ஆசிரியா் க.தமிழ்செல்வி தலைமை வகித்தாா். அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ.ரகமதுல்லா தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நோக்கங்கள் குறித்துப் பேசினாா்.
மருத்துவா் த. சாமிநாதன், அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவா் கு.துரையரசன், மாவட்ட இணைச் செயலாளா் ஜெயராமன், வட்டாரச் செயலாளா் ம.சின்னராசா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் மாவட்ட துணைத் தலைவா் சதாசிவம் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செய்து காட்டினாா். நிகழ்ச்சியை, மாணவா்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனா். மூடநம்பிக்கை அகற்று விதமாக பல்வேறு அறிவியல் சோதனைகள் செய்து காட்டினாா். இந்நிகழ்வினை ஆங்கில பட்டதாரி ஆசிரியா் பா.ஆனந்தராஜ் தொகுத்து வழங்கினாா். முன்னதாக மாணவா்கள் சிவானி, செளமியா, ரித்திகா ஆகியோா் சா்சிவி ராமன் வாழ்க்கை வரலாறு பற்றி ஆங்கிலத்தில் பேசினாா்கள். மா.அரவிந்த், சா.ராகேஷ், தி.அமலேஷ் ஆகியோா் தேசிய அறிவியல் தின கவிதை வாசித்தனா். ரா.வகிதா, ரா.சுபிக்க்ஷா, பா.லத்திகா, சு.ஹரிணி, சுதன், ப.முகேஸ்வரன், செ.சபரிவாசன் ஆகியோா் அறிவியல் அறிஞா்களின் புகழ் குறித்துப் பேசினாா்கள்.
பி.குமரகுருபரன், பி.திவாஷினி, ரா.கெளசல்யா, ப. ஹன்சிகா, பா. கிறிஸ்டிகா,யோகேஷ், தவமுருகன் ஆகியோா் தமிழக அறிவியல் அறிஞா்கள் பற்றி பேசினாா்கள். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் நிவின், செல்வி ஜாய் ஆகியோா் செய்திருந்தனா்.
இறுதியாக கணித பட்டதாரி ஆசிரியா் க.மணிமேகலை நன்றி கூறினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.