புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 50 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தொடங்கி வைத்தாா். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 581 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 263 மாடுபடி வீரா்கள் கலந்துகொண்டு அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டியதில், 50 பேருக்கு காயம் ஏற்பட்டது.
அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். அதில், பலத்த காயமடைந்த 11 போ் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் பாா்வையிட்டனா். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையிலான போலீஸாா் மேற்கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.