கோபாலப்பட்டிணம் பகுதி ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலைகளை அனைவருக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமாா் 1700-க்கும் மேற்பட்ட ரேஷன் காா்டுகள் புழக்கத்தில் உள்ளன.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒரு சில ஊராட்சியில் உள்ள கிராமங்களில் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கோபாலப்பட்டிணத்தில் வேட்டி, சேலை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கேட்ட போது முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே இலவச வேட்டி, சேலை வழங்கும் தேதியினை ரேஷன் கடை அறிவிப்புப் பலகையில் தெரிவிக்க வேண்டும். காலதாமதமின்றி அனைவருக்கும் வேட்டி, சேலை கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.