கட்டுமாவடி முதல் திருப்புனவாசல் வரை மகளிருக்கான இலவச பேருந்து இயக்ககோரி ST.ராமச்சந்திரன் MLA-விடம் மனு அளித்த ஆவுடையார்கோவில் ஒன்றிய தமுமுக...




கட்டுமாவடி முதல் திருப்புனவாசல் வரை மகளிருக்கான இலவச பேருந்து இயக்ககோரி அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரனிடம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் தமுமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்டுமாவடி முதல் திருப்புனவாசல் வரை மகளிருக்கான இலவச பேருந்தினை இயக்க கோரி நேற்று 14.03.2022 ஏம்பக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு வருகை புரிந்த அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களிடம் ஆவுடையார்கோவில் ஒன்றிய தமுமுக சார்பில் ஒன்றியத் தலைவர் அபுதாஹிர் அவர்கள் மனு அளித்தார்.



மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் இந்த வழித்தடத்தில் மகளிருக்கான இலவச பேருந்தினை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக அரசு பெண்கள் அனைவரும் இலவசமாக நகர பேருந்துகளில் செல்லலாம் என உத்தரவிட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியில் அமைந்திருக்கக் கூடிய கட்டுமாவடி முதல் திருப்புனவாசல் வரையிலான கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதிகளில் நகரப்பேருந்து வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தகவல்: தமுமுக, கோபாலப்பட்டிணம் கிளை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments