புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் இன்று (14.03.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 148 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1,35,000 மதிப்பீட்டில் வங்கிக் கடன் மானியம் இன்றையதினம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
------------------------------------------------------------------------------------------------------------------
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments