புதுக்கோட்டை அருகே குடிப்பதற்கு பணம் தராத தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சந்தோஷ் (26). இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு தனது தாய் லீலாவதியிடம் (55) மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு தாய் லீலாவதி பணம் கொடுக்க மறுத்து நீ உயிரோடு இருப்பதற்கு செத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு 'நான் ஏன் சாக வேண்டும்; நீ தான் சாகவேண்டும்' என்று கூறிய சந்தோஷ் தாய் என்று கூட பாராமல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு அவர் தப்பிக்காமல் இருக்க கட்டிவைத்து உள்ளார். அதில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் லீலாவதி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து சந்தோஷ் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்த ஆயுள் தண்டனையில் எந்தவித சலுகையும் அரசு வழங்காமல் 40 ஆண்டுகாலமுமு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தான் செய்த தவறை உணர்ந்து திருந்த மூன்று மாதகாலம் தனிமை சிறையில் வைக்கவும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குற்றவாளி சந்தோஷ் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்ற சம்பவம் நடந்து ஏழு மாதகாலத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.