அஜ்மீரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஹம்ஷபர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மதியம் வந்தபோது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், ரெயில்வே அதிகாரிகள் புதிய என்ஜினுடன் கீரனூர் புறப்பட்டு வந்தனர். பின்னர் பழுதடைந்த ரெயில் என்ஜின் மாற்றப்பட்டு அங்கிருந்து சுமார் 3 மணி நேரம் தாமதமாக ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அவதிப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.