ரியாத் (06 மார்ச் 2022): தனிமைப்படுத்தல், பிசிஆர் சோதனை உட்பட அனைத்து கோவிட் விதிமுறைகளையும் சவூதி அரேபியா திரும்பப் பெற்றது.
மக்கா, மதீனாவில் உள்ள ஹராமில் தொழுகைக்காக நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளை முகக்கவசங்கள் மற்றும் தவக்கல்னா பயன்பாடு தொடரும்.
இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம்
1. சவூதிக்கு வருபவர்களுக்கு இனி நிறுவன தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் PCR சான்றிதழ் தேவையில்லை. ஆனால் விசிட் விசாவில் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோவிட் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். கோவிட் காப்பீடு 90 ரியால்களில் இருந்து தொடங்குகிறது. மேலும் விசிட் விசாக்களுக்கான காப்பீடும் தொடரும்.
2. சவூதி அரேபியாவிற்கு நேரடி பயணத் தடை உள்ள நாடுகளுக்கு இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
3. மக்கா, மதினா பெரிய மசூதிகளில் மற்றும் சவூதியில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சமூக இடைவெளியை இனி கடைப்பிடிக்க வேண்டியதில்லை. வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்தும் பழையபடி செயல்படலாம்.
4. காற்றோட்டம் உள்ள திறந்த பகுதிகளில் முகக்கவசம் இனி அணிய அவசியமில்லை. அதே நேரத்தில் மூடிய உட்புறங்களில் முகமூடி அணிய வேண்டும். அதாவது, வணிக நிறுவனங்களிலும், மூடிய வாகனங்களிலும், பணியிடங்களிலும் முகமூடி அணிந்திருக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.