மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு) மெயின் வீதியை சேர்ந்த VMS.அப்துல் காதர் அவர்கள்...



கோபாலப்பட்டிணம்  மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு) பிரதான சாலையை சேர்ந்த இனாமுல் ஹுசைன், முஹம்மது இலியாஸ், மக்கத் தம்பி, முஸ்தபா, சுலைமான் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும் NMA.அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும், நல்ல முகம்மது ஆசிரியர் அவர்களின் மாமனாரும்,NMA.முகம்மது இக்பால், NMA அப்பாஸ் அவர்கள் மச்சானுமாகிய ஹாஜி.VMS.அப்துல் காதர் (வாத்தியார்) அவர்கள் இன்று 24-03-2022 வியாழக்கிழமை பட்டுக்கோட்டையில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று இரவு 9.00 மணியளவில் பட்டுக்கோட்டை ரயிலடி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜனாஸா இருப்பிடம்: கரிக்காடு, பட்டுக்கோட்டை.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments