கறம்பக்குடி பகுதியில் 10 ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வங்கிகள் மூலம் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க, விற்க தினமும் கறம்பக்குடி வந்து செல்கின்றனர். இதனால் நல்ல வியாபார ஸ்தலமாக கறம்பக்குடி உள்ளது.
10 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு
இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக 10 ரூபாய் நோட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரத்தில் தடங்கல் ஏற்பட்டு வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் யாரும் வாங்குவதில்லை. வங்கிகளும் வாங்க மறுக்கின்றன. எனவே வியாபாரிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் முடங்கி கிடக்கின்றன.
அதேவேளையில் 10 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதே போல் 5 ரூபாய் நாணயங்களும் அதிகம் புழக்கத்தில் இல்லை. இதனால் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வீண் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
வியாபாரிகள் கோரிக்கை
இந்த சில்லறை தட்டுப்பாட்டால் தேவையற்ற பொருட்களை வாங்கவேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி கறம்பக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 10 ரூபாய் நோட்டு மற்றும் 5 ரூபாய் நாணயங்களை வினியோகம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.