கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தாஜூதீன் மனைவி பைலா பானு (வயது 51). இவர் நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி அவரிடமிருந்து நகையை பறிக்க முயற்சித்துள்ளனர். பைலா பானு கூச்சலிட்டு உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்தனர். இதையறிந்த மர்மநபர்கள் 2 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய 2 பேரில் ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரையை சேர்ந்த சித்திக் அலி (43) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே 8 திருட்டு வழக்குகள் மதுரை போலீஸ் நிலையத்தில் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்திக்அலியை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.