புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எம். உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களில் 36,901 பேர் தகுதி வாய்ந்த பயனாளிகள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. தள்ளுபடி பெற தகுதிவாய்ந்த கடன்தாரர்களின் கடன் தள்ளுபடி விவரம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் www.pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியிலும், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் www.pccbank.in என்ற இணையதள முகவரியிலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்றுள்ள புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடன் தள்ளுபடியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பொதுமக்கள் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சரகத் துணைப்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் சரக அளவிலான சிறப்பு குறைதீர்வுக் குழுக்களிடம் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.