புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு மேல் லேசாக மழை தூறியது. அதன்பின் மழை நின்றது. மாவட்டத்தில் ஆங்காங்கே இதேபோல மழை பெய்தது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை அருகே சிவந்தான்பட்டி கிராமத்தில் நிலத்தில் கடலை பறிப்பு வேலையில் மேனகா (வயது 32), அன்னக்கிளி (38), பொன்னு அரும்பு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த சத்தத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அவர்கள் 3 பேரும் மழைக்கு ஒதுங்கி அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சமடைந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மேனகா, அன்னக்கிளி, பொன்னு அரும்பு ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். மேலும் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.