அம்மாபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது “ராம நவமி” ஊர்வலங்களின் பெயரால் கர்நாடகா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீதான எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும். சமீபத்தில் ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சங்பரிவார் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் இனப்படுகொலைக்கான பகிரங்க அழைப்புகள் விடுக்கப்பட்டன. இதன் நீட்சிகளாகவே ராம நவமி கலவரங்களை பார்க்க வேண்டியுள்ளது. சங்பரிவார்களின் செயல்திட்டங்களின் வாயிலாக முஸ்லிம்களின் உயிர்களின் மீதும், மஸ்ஜிதுகளின் மீதும், உடமைகளின் மீதும் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் பகுதியாக இன்று, 15/04/2022 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம்,அம்மாப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். இவன், சமூக ஊடக அணி SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.