அதிராம்பட்டினம் கடற்பகுதிக்கு படகில் வந்த 2 இலங்கை வாலிபர்கள்




அதிராம்பட்டினம் கடற்பகுதிக்கு படகில் வந்த 2 இலங்கை வாலிபர்களை பிடித்து கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிராம்பட்டினம் கடற்பகுதிக்கு படகில் வந்த 2 இலங்கை வாலிபர்களை பிடித்து கடலோர காவல்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இலங்கை பதிவு எண் கொண்ட படகு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழத்தோட்டம் கடற்பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த படகை ஆய்வு செய்தனர். 

இலங்கையை சேர்ந்தவர்கள்

ஆய்வில் அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் இருந்த 2 பேர் இலங்கையை சேர்ந்த வாலிபர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து படகையும், அதில் இருந்த 2 வாலிபர்களையும் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், இலங்கை மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த சுதாகர், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ரோசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் அந்த படகுக்குரிய ஆவணங்களோ? வேறு எந்தவித அடையாள அட்டையோ இல்லாததும் தெரியவந்தது. 

விசாரணை 

அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? அவர்களுக்கு இந்த பகுதியில் உள்ள யாருடனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர்கள், தாங்கள் மீன்பிடிக்க வந்ததாகவும் அப்போது படகு பழுதானதால் இரண்டு தினங்களாக கடலில் தத்தளித்ததாகவும், தற்போது படகு கரை தட்டி இந்த பகுதிக்கு வந்து சேர்ந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments