கோபாலப்பட்டிணத்தில் பெரிய (ஜூம்ஆ) பள்ளிவாசல் வளாகத்தில் அழகு செடிகள் வைப்பு ..!




கோபாலப்பட்டிணத்தில் பெரிய (ஜூம்ஆ) பள்ளிவாசல் வளாகத்தில் அழகு செடிகள் வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் பெரிய (ஜூம்ஆ) பள்ளிவாசல். ஊரில் இந்த பள்ளிவாசல் தான் பெரியது மேலும் இங்கு தான் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெறும். பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறைகள், உளு செய்யும் இடம், ஹவுள் ஆகியவற்றை 25.03.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணியளவில் தொழுகையாளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அழகு செடி மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. பூத்து குலுங்கும் பூஞ்சோலையாக நமது பள்ளிவாசல் காட்சியளிக்கும் என்பதை நினைக்கும் போது மனதில் சந்தோசம் எழுகிறது.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments