இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் உள்பட 19 பேர் விடுதலை நிபந்தனையும் விதிப்பு




இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் உள்பட 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தை சேர்ந்த 16 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த இந்த 19 மீனவர்களும் நேற்று இலங்கையின் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த மீனவர்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது, அதை மீறி வந்தால் 1½ ஆண்டு் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களது படகு உரிமையாளர்கள் ஜூலை மாதம் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏமாற்றம்

மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments