புதுக்கோட்டையில் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி நாற்காலிகள் வழங்கல்




புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 8.48 லட்சம் மதிப்பில் பேட்டரி பொருத்தப்பட்ட மடக்கு சக்கர நாற்காலிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இந்த சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 419 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஆா். கணேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கருணாகரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments