ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
இந்த தடை காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடை காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இப்பகுதியில் மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்கள் பெரும்பாலானோர் ராமேஸ்வரம், குளச்சல், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர் பகுதிகளை சேர்ந்தவர்கள். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலுள்ள மீன்பிடித் தளங்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தடைக்காலம் என்பதால் மீன்பிடி தளத்தில் உள்ள சிறிய கடைகள் மற்றும் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. இதனால் சில வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மீன்பிடி சார்ந்த சிறு தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.