தஞ்சாவூர் அருகே சாலையில் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 9 பேர் உறவினரை வெளிநாட்டுக்கு அனுப்ப திருச்சி விமான நிலையம் நோக்கி ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சையை அடுத்த புதுக்குடி காமாட்சிபுரம் அருகே சென்றபோது வேனில் புகை வந்துள்ளது. இதனை கவனித்த வேன் டிரைவர் உடனடியாக வேனை நிறுத்தி அனைவரையும் வெளியேற்றினார்.
அப்போது சிறிது நேரத்திலேயே வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் ஆம்னி வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.