சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.




புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.04.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த சமையலர்கள், உதவியாளர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். இதில் கவுணி அரிசி, முருக்கு, அதிரசம், வடை, சேமியா பாயாசம், முட்டை அவியல், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், புளி சாதம்,
மாவு உருண்டை வகைகள், கீரை சூப்பு வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவு வகைகள் போட்டியில் கலந்து கொண்டவர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது.

மாணவர்களுக்காக பள்ளிகளில் சத்துணவு தயார் செய்யும் சமையலர்கள், உதவியாளர்களின் பணிகளை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவதற்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)
தேவிகா ராணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments