முத்துக்குடாவில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் மே 1 தொழிலாளர் தின கிராம சபை கூட்டம்




முத்துக்குடாவில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் மே 1 தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் தொழிலாளர் தின கிராம சபைக் கூட்டம் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,.BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்புராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர்அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷாஅபுதாஹீர் அவர்கள்.திரு.பெ.ரமேஷ் அவர்கள், திரு.மு.உதயகுமார் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

 கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கூட்டப்பொருள்கள்

ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் தொடர்பாக

ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்த்தி தடை செய்தல் பற்றி விவாதித்தல்

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

இதர பொருள்கள்

கூட்டத்திற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வரவும்.

 இவண்,

ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,

உதயம் அபுதாஹீர்
துணைத்தலைவர்

உறுப்பினர்கள்:

EM.சித்திநிஜாமியா
A.அபுதாஹீர்
A.மும்தாஜ்பேகம், R.ரஜபுநிஜா,
S.பெனாசீர்பேகம் 
A. சாதிக்பாட்ஷா,
M. அன்வர்பாட்ஷா, 
R. மல்லிகா, G.சிங்காரி, S.லெத்திப், 
S.பிரேமா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments