இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் தாயகம் திரும்பினர். உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.
3 மீனவர்கள் விடுதலை
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசுவலிங்கம் (வயது 50), சக்திவேல் (38), கலைமாறன் (29) ஆகிய 3 பேர் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 3 பேரும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 3 மீனவர்களையும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி வழக்கை விசாரித்த நீதிபதி 3 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தனர்
அதனடிப்படையில் மீனவர்கள் நேற்று இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். இதையடுத்து 3 பேரையும் மீன்வளத்துறை மேற்பார்வையாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மீனவர்கள் 3 பேரும் சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் ஜெகதாப்பட்டினத்திற்கு வந்த 3 மீனவர்களையும் அவர்களது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.