ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சுந்தரபாண்டிய பட்டிணம் எனப்படும் எஸ்.பி. பட்டிணம் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எஸ்.பி.பட்டிணம் பந்தய ரசிகர்க ளால் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
திருவாடானை யூனியன் சேர்மன் முஹம்மது முக்தார் மற்றும் ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆலிம் ஆகியோர் தலைமை தாங்கினார். மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு, சின்னமாடு என 2 வகையான மாட்டு வண்டிகள் தனித்தனியே 2 கட்டங்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெ ற்றது.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.
2 கட்டமாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் 4 மாட்டு வண்டிகளுக்கு பரிசுத் தொகையும், வெற்றி க்கான கோப்பையும் வழங்கப்ப ட்டது. மேலும் ஒவ்வொரு மைல் தூரத்திலும் முதலா வதாக வரும் மாட்டின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையின் இருபுறமும் ஆரவாரம் செய்து போட்டியை கண்டு களித்தனர்.
திருவாடானை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ தலை மையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.