திருச்சியிலிருந்து குவைத்திற்கு மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்...!




செவ்வாய்கிழமை மதியம் 12.50-க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு குவைத் நேரப்படி, மாலை 4.10 மணிக்கு குவைத் நாட்டிற்க்கு சென்றடையும்.

திருச்சியில் இருந்து குவைத்நாட்டிற்கு நேரடி விமான சேவை வாராந்திர விமானசேவை மே 03 முதல் தொடங்கியது செவ்வாய்கிழமை தோறும் இந்த சேவை வழங்கபடும்

திருச்சியில் இருந்து குவைத்நாட்டிற்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்த நிலையில், சென்னையில் இருந்தோ, பெங்களுரில் இருந்தோ செல்ல வேண்டியது இருந்து வந்தது .

இந்நிலையில், திருச்சியில் இருந்து குவைத்திற்கு விமான சேவை வழங்க வேண்டும் என விமான பயணிகளின் நீண்ட கால கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குவைத்திற்கு நேரடி வாராந்திர விமானசேவை மே 03 முதல் தொடங்கியது.

இந்த விமான சேவையானது, ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மதியம் 12.50-க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு குவைத் நேரப்படி, மாலை 4.10 மணிக்கு குவைத் நாட்டிற்க்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அந்த விமானமானது குவைத் நேரப்படி, 5.10 மணிக்கு குவைத்தில் இருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நள்ளிரவு 12.35 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்தடைகிறது.

வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் இச்சேவை வழங்கப்படுவதுடன், ஜூன் 25-ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இந்த விமானம் இயக்கப்பட உள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments