கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்படடிணம் என்றும் உதவும் கரங்கள் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் : 09.05.2022 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் துவங்கி மாலை 5.00 மணி வரை கோபாலப்பட்டிணம் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மீமிசல் காவல்துறை அதிகாரி இளையாராஜாஅவர்கள் துவக்கி வைத்தார்கள் , கோபாலப்பட்டிணம் ஊர் ஜமாஅத்தார்கள் முன்னிலை வகித்தார்கள்.
முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் வலி ,கருவிழி நோய்கள் ,கண் எரிச்சல் ,கண்ணில் நீர் வடிதல் ,வெள்ளெழுத்து ,கண் புரை பரிசோதனை , கிட்ட பார்வை ,தூரப்பார்வை ,கண்நீர் அழுத்த வியாதி ,கருவிழி புண் உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தார்கள்.
இதில் மொத்தம் (126) நபர்கள் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதியம் 2 மணி வரை என அறிவிக்கப்பட்ட முகாம் மக்கள் அதிமாக வந்த காரணத்தால் மாலை 5.00 மணி வரை இம்முகாம் நடைபெற்றது.
முகாம் ஏற்பாடுகளை என்றும் உதவும் கரங்கள் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
மக்களுக்கு பயனளிக்க கூடிய மகத்தான சேவை செய்த கோவை இன்லைப் விஷன்கேர்யும் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையையும் இதற்காக உழைத்த, பொருளாதார உதவிகள் செய்த அத்துணை பேர்களையும் GPM மீடியா வாழ்த்தி & பாராட்டுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.