ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் கவிதாராமு நேற்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் இதர இலவச வீடு கட்டும் திட்டங்களின் கீழ் பயனாளிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்படுகிறது. இத்திட்ட செயலாக்கத்திற்கு பொறுப்பாக உள்ள சில அலுவலர்கள் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளிடம் பல்வேறு காரணங்களுக்கு கையூட்டு பெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, வீடு கட்டும் திட்ட செயலாக்கத்திற்கு பொறுப்பாக உள்ள அலுவலர்கள் எவரேனும், வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கோ, பட்டியல் தொகை விடுவிப்பதற்கோ, கையூட்டாக பணம், பொருள் ஏதேனும் கோரினால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை 04322 223766 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் எழுத்து மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.