கிருஷ்னாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக 'மனம் விட்டு பேசலாம் வாங்க' நிகழ்ச்சி






கிருஷ்னாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக  'மனம் விட்டு பேசலாம் வாங்க' நிகழ்ச்சி 

கிருஷ்னாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட 'மனம் விட்டு பேசலாம் வாங்க' நிகழ்ச்சி நேற்று மே 20 வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமை தாங்க SDPI கட்சியின் கிருஷ்னாஜிப்பட்டின ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜா சாகிப் வரவேற்புரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.

இஸ்லாமிய தகவல் மையத்தின் மண்டல பொறுப்பாளர் A.T.அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் P.M.S.குலாம் முகமது, கிருஷ்னாஜிப்பட்டினம் ஜமாத் தலைவர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 10 -ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பல தலைப்புகளின் கீழ் ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடப்பட்டது.   

இறுதியாக அறந்தாங்கி வடக்கு தொகுதியின் தலைவர் M.முகமது அஜிஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இவன்,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments