புதுக்கோட்டை மேல 6-ம் வீதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவர் வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று திலகர் திடல் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் வைப்பு தொகை செலுத்தும் எந்திரத்தில் ரூ.23 ஆயிரத்து 700 செலுத்தி உள்ளார். அப்போது பணம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிக்கொண்டது என பழனிவேலு கருதி அங்கிருந்து சென்றார். அந்த நேரத்தில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு உத்ராணி அங்கு வந்தார். அங்கு பணம் செலுத்தக்கூடிய ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.23 ஆயிரத்து 700 வெளியே இருந்தது. அப்போது அதனை யார் விட்டுச்சென்றது என அவருக்கு தெரியவில்லை. அங்கிருந்தவர்களிடம் யாராவது வந்து பணம் கேட்டால் வங்கியில் தகவல் தெரிவித்துவிட்டு, டவுன் போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறி அதனை மீட்டு வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கி கொண்டதாகவும், அதனை மீட்டு தருமாறும் வங்கியில் பழனிவேலு புகார் கடிதம் கொடுத்தார். அப்போது அதிகாரிகள் நடந்த விவரத்தை கூறியிருக்கின்றனர். இதையடுத்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேற்று பழனிவேலு வந்தார். அங்கு அவரது ரூ.23 ஆயிரத்து 700-ஐ டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஒப்படைத்தார். அப்போது ஏட்டு உத்ராணி அருகில் இருந்தார். வங்கி ஏ.டி.எம்.மில் இருந்த ரூ.23 ஆயிரத்து 700 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஏட்டுவின் மனிதநேயத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் பாராட்டி கவுரவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.