அரிமளம், மணமேல்குடியில் மணல் அள்ளிய மினி லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் அம்புராணி அணைக்கட்டு பகுதியில் சிலர் ஆற்று மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் மினி லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாகனங்கள் பறிமுதல்
இதேபோல் மணமேல்குடி சிறுகரை வெள்ளாற்றில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணமேல்குடி தாசில்தார் ராஜா தலைமையிலான அதிகாரிகள் சிறுகரை பகுதி மற்றும் கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது 2 சரக்கு வாகனங்களில் மணல் அள்ளி வந்தவர்கள் அந்த வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து, அதிகாரிகள் அந்த சரக்கு வாகனங்களை மணலுடன் பறிமுதல் செய்து மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.