கீரனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு திரும்பி வந்தபோது அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் இறந்தனர். பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.
2 பேர் பலி
திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே சேப்பலாம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்தி (16). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் பாலமுருகன் (21). எலக்ட்ரீசியன். இவர்கள் 3 பேரும் நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார். களமாவூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குமார் மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கார்த்தி படுகாயமடைந்தார்.
போலீசார் விசாரணை
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடைேய இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார், பாலமுருகன் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.