புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனத்தார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் மற்றும் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்த போது கால்வாய்களை தூர்வார டெண்டர் விடப்பட்டு தூர்வாரும் பணி முழு அளவில் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு பெய்த மழையில் கல்லணை பாசன பகுதியான மேற்பனைக்காட்டில் இருந்து முப்பாலை வரையில் விவசாயம் சிறப்பாக செய்யப்பட்டது. தற்போது குறுைவ விவசாயத்திற்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தண்ணீர் வரும் வழித்தட வாய்க்கால் தூர்வாராமல் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. ஆகையால் போர்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் மேற்பனைக்காட்டில் இருந்து முப்பாலை வரையில் உள்ள தாய்வாய்க்கால்கள், கிளை வாய்க்காலான திருவம்பாடி, கலக்கமங்கலம், சிறுமருதூர் ஆகிய வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.