தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவிய போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலை மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது; மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ‘குறளோவியம்” என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தெரிவு செய்து, போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இக்குறளோவிய போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 365 ஓவியங்கள் திருக்குறள் குறளோவியம் தினசரி நாட்காட்டி புத்தகமாக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பு பரிசாக ரூ.5,000மும், ஊக்கப் பரிசாக ரூ.1,000மும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்.2 மாணவி அகல்யா மற்றும் பிலிவலம் மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி பவித்ரா பானு ஆகிய 2 மாணவிகளுக்கு தலா சிறப்பு பரிசாக ரூ.5,000 காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்.1மாணவி தேவிகா, பொன்னமராவதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தேஜன்யா, பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்.2 மாணவி கீதா ஆகிய 3 மாணவிகளுக்கு தலா ஊக்கப் பரிசாக ரூ.1,000 காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.