மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தில் 175 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 40 பவுன் நகைகளை மீட்பதற்காக புதுக்கோட்டை போலீசார் கேரளா விரைகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தில் தொழிலதிபர் முகமது நிஜாம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலிருந்த 175 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 62 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜோஸ்மில்டன் என்பவர் துபாய்க்கு தப்பிச் சென்றார். இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரையும் இந்தியா அழைத்து வந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள நகைகளை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்து போலீசார் ஜோஸ்மில்டனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 8 பேரில் ஒருவரான யூனிஸ் என்பவர் கேரளாவில் 40 பவுனுக்கும் அதிகமான நகைகளை அடகு வைத்தும் விற்பனை செய்தும் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை மீட்பதற்காக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
இன்று அல்லது நாளை குற்றவாளிகள் 9 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அதன்பின்பு காவலில் எடுத்து விசாரித்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்வது குறித்த நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்த வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.