ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது ஒன்றிய மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
கூட்டத்திற்கு நிர்வாகி கணேசன் தலைமை வகித்தார். கொடியேற்றத்துடன் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில்ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு இயக்கப்பட வேண்டும், அமரடக்கியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும்,கருப்பூர் கிராமத்தில் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்,
இந்த ஆண்டு (2021-22) குலை நோய் மற்றும் புகையானால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்,
ஆவுடையார்கோவில் நான்கு கடை வீதியிலும் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.