தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28ந்தேதி வரை நீடிக்கும். குறிப்பாக 24ந்தேதி வரை அனல் கக்கும்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது.
இதனால் மின்விசிறி இல்லாமல் வீட்டில் தூங்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்கினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வேப்போது கோடை மழை பெய்து ஆறுதலும் தருகிறது..
வெயிலின் உக்கிரத்தில் தப்பிக்க, தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர்.
இந்த அக்னி வெய்யிலின் தாகத்தை குறைக்க பொதுமக்கள் தண்ணிர், மோர், தர்பூசணிப் பழம், போன்ற உடலுக்கு குளிர்ச்சியான ஆகாரங்களை அதிமாக சேர்த்துக் கொண்டால் உடல் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் எதிப்பு சக்தி இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.