நாட்டாணி புரசக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் உள்ள நாட்டாணி புரசக்குடி கிராமத்தில் ஏரி புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வீரமுத்து, தாசில்தார் அலுவலக வருவாய் ஆய்வாளர் விஜயா மற்றும் மின்வாரிய ஊழியர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு வந்திருந்தனர். இதில் பொக்லைன் எந்திரம் மூலம் ஒரு வீடு இடிக்கப்பட்டு, 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் ஒரு தரப்பினரிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மேலும் ஒரு தரப்பை சேர்ந்தவர்களிடம் மட்டுமின்றி, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.